அரிசி விலைக் கட்டுப்பாடு தொடர்பான சோதனை நடவடிக்கைகளால் இதுவரை 300க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் சேவை அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு எதிரான வழக்குத் தாக்கல் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அந்த சபை அறிவித்துள்ளது.