புத்தளம் – பலவியா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 42 வயதான பலவியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.