சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 555 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 20 பொதிகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.