கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல வீதிகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த வீதிகள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை உடனடியாக புனரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார குறிப்பிட்டார்.