ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.
அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இந்தநிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் மழையுடனான வானிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.