மகளிர் ஆசியக் கிண்ண 20 க்கு 20 ஓவர் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
தம்புள்ளை ரங்கிரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி இலங்கை அணிக்கு 166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.