சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இவ்வருடம் இடம்பெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை மீள் பரிசீலனை பெறுபேறுகள் மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு முன்னர் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்ததாகவும் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
