நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆயத்தமாக்கப்பட்டிருந்த பல பொதிகளில் இருந்து பாரியளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சீதுவ பிரதேசத்தில் உள்ள விநியோக நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருந்த பொதிகளில் 8 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளும், மெண்டி என்ற போதைப்பொருள் 160 கிராமும், 350 எக்ஸ்டஸி போதை மாத்திரைகளும் 08 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இருந்துள்ளன. இந்த பொதிகள் கொழும்பு பகுதியில் உள்ள பல போலி முகவரிகளுக்கு கூரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளன
இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது..