fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாசனைத்திரவிய துறையின் மறுமலர்ச்சிக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 10, 2023 12:47

வாசனைத்திரவிய துறையின் மறுமலர்ச்சிக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறது

ஒரு காலத்தில் பிரதான வருமான ஆதாரமாக இருந்த நாட்டின் வாசனைத்திரவிய தொழிலை புத்துயிர் பெறுவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

வாசனைத்திரவிய சபையின் 19 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, தொழில்துறையின் மறுமலர்ச்சிக்கு முறையான திட்டத்தை தயாரிக்குமாறு வலியுறுத்தியதோடு, தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கு தனியார் துறையை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் கறுவாத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு பங்களித்த சாரதா டி சில்வா மற்றும் பேராசிரியர் ஜெயசிறி லங்காகே ஆகியோருக்கும் ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

மேலும், விவசாயம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க நினைவுப் பரிசொன்றை வழங்கிவைத்ததுடன், வாசனைத்திரவிய சபையினால் நினைவுப் பரிசுப் பரிசையும் பெற்றுக்கொண்டார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 10, 2023 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க