கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கந்தானை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் தொம்பே, உடுகம்பொல மற்றும் கிரிவத்துடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
கைதானவர்களிடம் இருந்து ரீ – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 57 தோட்டாக்கள், கையடக்க தொலைபேசி மற்றும் வேன் ரக வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.