சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியமைக்காக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அவர் தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது கடன் தவணையை பெறுவதற்கான இலங்கையின் முயற்சி இதன்மூலம் எடுத்துக்காட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்து, நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கும் ஒரு பொருளாதார நிலப்பரப்பை உருவாக்குவதற்கு அமெரிக்கா உறுதியுடன் உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.