fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை குறித்து கடற்படை வெளியிட்டுள்ள விடயம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2023 10:48

நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை குறித்து கடற்படை வெளியிட்டுள்ள விடயம்

நேற்றைய தினம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  போதைப்பொருள் தொகை, ஹெரோயின் போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 225 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தொகை இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய ஆழ்கடலில் பலநாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை முற்றுகையிட்ட போது குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பில்  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் இழுவைப் படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2023 10:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க