fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தீபாவளி கொடுப்பனவை அதிகரிக்குமாறு திகாம்பரம் கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2023 12:25

தீபாவளி கொடுப்பனவை அதிகரிக்குமாறு திகாம்பரம் கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி கொடுப்பனவை 20,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்திடம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி கொடுப்பனவை 15,000 ரூபாவில் இருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்குமாறு  பழனி திகாம்பரம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ள நிலையில், குறித்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் ஆராயுமாறு  அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக தானிய வகை, சீனி, எண்ணெய், மரக்கறி, மீன், கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தீர்வாக இந்த கொடுப்பனவை இம்முறை அதிகரித்து வழங்குமாறு குறித்த கடிதத்தினூடாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2023 12:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க