fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பல கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2023 13:31

பல கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

பல கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகந்த அவதானத்துடன் இருக்குமாறு  நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அந்தந்த ஆறுகளை அண்மித்து வசிப்பவர்கள், அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகள் மற்றும் புறவழிச்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அந்த கங்கைகளை அண்மித்த பகுதிகளில் மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி ஆற்றின் நீரின் ஓட்டம் தொடர்ந்தும் காணப்படுவதுடன், அவிசாவளையின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் சில இடங்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2023 13:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க