போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்- பிரதமர்
Related Articles
போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான உள்நாட்டுப் போரால் கொலைகள் எங்கு முடிவடையும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவே நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க மீண்டும் ஒரு தன்னார்வ வேலைத்திட்டம் தேவை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தனித்தனியாக, நாட்டின் கல்வி முறையை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மாகாண சபை மட்டத்தில் உள்ள அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.