அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை ( 20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டுபாயில் இருந்து செயற்படும் பிரபல குற்றவாளியான ‘மன்னா ரமேஷுக்கு’ துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயற்பட்ட அந்த பத்திரிகையாளர் ரகசிய தகவலை வழங்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகளால் நேற்றிரவு மீகொட பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த ஊடகவியலாளர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் அவர் தொடர்பில் இருந்தமை தெரிய வந்துள்ளது.
‘மன்னா ரமேஷ்’ என்பவர் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பல தடவைகள் பணம் செலுத்தியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் வழங்கிய ஊடகவியலாளர் மற்றும் மூன்று பேர் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளரை 72 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ள அதேவேளை, ஏனைய மூன்று சந்தேகநபர்களை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.