மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு
Related Articles
மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம், நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசிகளின் தட்டுப்பாடு காரணமாக, கடந்த காலத்தில் சுகாதார அமைச்சு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், யுனிசெஃப் அமைப்பின் உதவியுடன், விரைவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். குறித்த தடுப்பூசியினை கொள்வனவு செய்யும் இறக்குமதியாளர்கள் ஒரு சிலரே உள்ளனர்.
இதனால் குறித்த தடுப்பூசிக்கான தட்டுப்பாடு காணப்பட்டது. எனினும், நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர், தற்போது குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி, ஆபிரிக்க கண்டத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு, செலுத்தப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.