fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திருகோணமலை வீதியை மறித்து மீனவர்கள் போராட்டம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2023 12:05

திருகோணமலை வீதியை மறித்து மீனவர்கள் போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் 176 பேருக்கு வழங்கப்பட்ட சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி இன்றைய தினம் (13) வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை சிறிமாபுரவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் திருக்கடலூர் வழியாக ஏகாம்பரம் வீதியூடாக வந்து திருகோணமலை- கண்டி பிரதான வீதியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடல் வளம் அழிந்து போவதாகவும், மீனவர்களின் தொழில் அற்றுப் போவதாகவும், அரச அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் தெரிந்திருந்தும் எதுவித சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2023 12:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க