fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண்சரிவு அபாய எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2023 09:22

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கல மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று இரவு 8 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் அஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களும் மண்சரிவு, பாறைகள் சரிவு மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2023 09:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க