2023 LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை இசைக்கும் போது பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச ஒரு முக்கிய வசனத்தை தவறாக உச்சரித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைக் குறிப்பிட்டு இதுதொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கோரியுள்ளார்.
தேசிய கீதம் நாட்டின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அதனை யாரும் சிதைக்க முடியாது. எனவே, தேசிய கீதம் திரிக்கப்பட்ட இதுபோன்ற சம்பவங்களை மன்னிக்க முடியாது.
“ஒரு தேசிய கீதத்தை ரீமிக்ஸ் செய்யவோ அல்லது ராப் இசையாக பாடவோ முடியாது. எனவே, சமீபத்தில் நடந்த சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சு ஆலோசித்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகி, உமாரா சின்ஹவன்சா 2023 LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை பாடும் போது ஒரு முக்கிய வசனத்தை தவறாக உச்சரித்ததால் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரியவரானார்.
அந்த வீடியோவில் அவர் ‘நமோ நமோ மாதா’ என்பதற்குப் பதிலாக ‘நமோ நமோ மஹதா’ என்று மீண்டும் மீண்டும் பாடியுள்ளார், இதன் விளைவாக அனைத்து சமூக ஊடக தளங்களிலும் தற்போதைய ட்ரெண்டிங் மஹதா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது