2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது.
இதற்கமைய இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை, எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இரண்டாம் தவணை விடுமுறையின் போது நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.