fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து தாயொருவர் விழுந்து மரணம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2023 11:05

அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து தாயொருவர் விழுந்து மரணம்

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கண்டி வீதிக்கு அருகில் உள்ள யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து பெண் ஒருவர் நேற்று (17) நள்ளிரவு 12.30 மணியளவில் வீழ்ந்துள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சதுரிகா மதுஷானி என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகை அடிப்படையில் வசித்து வந்தார்.

குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.. உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெம்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2023 11:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க