ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை சந்தித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது உத்திகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க பகிர்ந்து கொண்டதாகவும், இந்த முயற்சிகளில் பொதுநலவாய நாடுகளின் சாத்தியமான ஈடுபாட்டை ஆராய்ந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய அமைப்பினுள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் குறித்தும் பொதுச்செயலாளருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.