நாட்டிலுள்ள 60% பாடசாலை வளாகங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருக்கம்
Related Articles
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.
நாட்டிலுள்ள 60% பாடசாலை வளாகங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுவதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 65% மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 65-70% பாடசாலைகளில் இவ்வாறான நுளம்பு லார்வாக்கள் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் நிபுணர் சதீர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு அருகாமையில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அழிப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்காலப்பகுதியில் நாட்டில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 34,480 ஆகும்.
மேல் மாகாணத்தில் 17020 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.