விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானிய வவுச்சர்களை அச்சிடுவதற்காக அரச அச்சக அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வவுச்சர்கள் விசேட வொட்டர்மார்க் அடையாளத்துடன் அச்சிடப்பட்டு இன்னும் சில வாரங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.
சிறு போகத்தில் உரங்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை அளித்து உர மானிய வவுச்சர் தகுதியான விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.