நீர் கட்டணம் செலுத்துவது 40% குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
8400 மில்லியன் ரூபா நிலுவை கட்டணத்தை நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 6200 மில்லியன் ரூபா கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தப்படாமையால் சபையின் நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.