fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைனில் ஜோ பைடன்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2023 12:16

ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைனில் ஜோ பைடன்

ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் சென்ற அதிபர் ஜோ பைடன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இரு தரப்பும் தீவிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், போலந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அமெரிக்காவும் ஐரோப்பாவின் நாடுகளும் ரஷ்யாவைக் கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ முயலவில்லை.

புதின் கூறியதுபோல் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தாக்கத் திட்டமிடவில்லை. அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழ விரும்பும் மில்லியன் கணக்கான ரஷ்ய குடிமக்களை எதிரிகளாக பார்க்கவில்லை. உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிற்கு வெற்றியாக இருக்காது. குண்டுகள் விழ ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து, ரஷ்ய தாங்கிகள் உருள ஆரம்பிக்கின்றன.

உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ஒரு வருடம் கழித்து தலைநகர் கீவ் வலுவாக நிற்கிறது, அது பெருமையுடன் நிற்கிறது, அது உயரமாக நிற்கிறது மற்றும் மிக முக்கியமாக கீவ் சுதந்திரமாக நிற்கிறது என தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2023 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க