fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2023 11:46

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மகசீன் மற்றும் ஒன்பது 9 மி.மீ ரக தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகுருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை (STF) முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தங்கியிருந்த இடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் 187 பாலுணர்வை ஏற்படுத்தும் மாத்திரைகள் (‘மதன மோதக’ மாத்திரைகள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், களுத்துறை தெற்கு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2023 11:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க