வானிலை முன்னறிவிப்பு
Related Articles
கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை எதிர்பார்க்கப்படுவதுடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி, முக்கியமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.