கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்
Related Articles
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் இரண்டாம் constantine வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது 82வது வயதில் உயிரிழந்தார். கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர்.
ஆனால் கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967ம் ஆண்டு முதல் எதிர்ப்பு எழுந்த நிலையில் 2ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அதன்பின், 1974ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பி அங்கு வாழ்ந்து வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்துள்ளார்.