fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2022 11:07

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் துணி தைக்கும் இடத்தில் இது நடத்தப்பட்டுள்ளது.

மீரிகம பல்லேவெல பகுதியில் உள்ள ஆடைத் தையல் கடையொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், மாணவர்களுக்கு விற்பனை செய்யவிருந்த சுமார் 150 கஞ்சா கலந்த போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்த இடத்தில் துணி தைக்க வரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பல்லேவெல பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2022 11:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க