அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி
Related Articles
அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது காணப்படும் அடிப்படை மற்றும் அலுவலக வசதிகள், மனித வளத்தை பயன்படுத்தி மேலதிக செலவுகளின்றி மன்னார் மற்றும் அம்பாறை நகர சபைகளை மாநகர சபைகளாக தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஸ் குணவர்தன இதுதொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்பித்திருந்தார்.