fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2022 10:56

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணை இன்று (05 ஆரம்பமாகிறது. இதற்கமைவாக இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள், மார்ச் மாதம் 24 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேதஜயந்த தெரிவித்தார்.

கொவிட் தொற்று வைரசு காரணமாக பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தடைப்பட்டன.

இதன் காரணமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவிருந்த 03ம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.

இதேவேளை நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணைக்கான இறுதிக் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி 20ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2022 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க