முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் சதொச ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதனூடாக ஊழல், குற்றம் இழைத்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களின் ஒருவரான மொஹமட் ஷாகீர் ஆகியோர் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வழக்கு தொடர்பான ஆவணங்கள், தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டனர். குறித்த ஆவணங்களை பிரதிவாதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.