அனைத்து பல்கலைக்கழக மாணவர் படையணி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிசார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மருதானை எல்பிஸ்டன் மண்டபத்திற்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் படையணியின் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் படையணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசான் ஜீவந்த குணதிலக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெக்னிக்கல் சந்தியிலிருந்து கோட்டை நோக்கி பேரணியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. டெக்னிக்கல் சந்தியில் வைத்து பேரணியை நிறுத்துமாறு பொலிசார் பணிப்புரை விடுத்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் டீன்ஸ் வீதி ஊடாக லிப்டன் சுற்றுவட்ட பிரதேசத்திற்கு வருகை தர முயற்சித்தனர். இதன்போது அவர்களை கலைப்பதற்காக பொலிசார் நீர் மற்றும் கண்ணீர் புகையிரயோகம் நடத்தினர்.