இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனியவள கூட்டுத்தாபனத்தின் மொத்த களஞ்சியசாலை தொகுதியிலிருந்து புகையிரதம் மற்றும் பவுசர்களினூடாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அத்தோடு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள பெற்றோல் கப்பலிலிருந்து பெறப்பட்ட பெற்றோல் மாதிரி பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலிலிருந்து பெற்றோலை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.