ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் பயனுள்ள தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு கடன் உதவி வழங்குமாறும் இலங்கைக்கு மீண்டும் Aeroflot விமான சேவையை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.