மீன் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் பண்வில மடுகெலே பகுதியில் பதிவாகியுள்ளது. வீட்டின் முன்பகுதியில் மீன்களை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் இரண்டரை அடி ஆழமான தண்ணீர் தொட்டியில் விழுந்தே குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன்பாக குழந்தை தனியாக விளையாடிக்கொண்டிருந்தபோது மீன்தொட்டிக்குள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.