22வது அரசியல் திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 22வது திருத்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் தொடர்புபடுவதை தடுக்கும் வகையில் 22வது அரசியல் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கும், பாராளுமன்றத்திற்குமிடையில் அதிகாரத்தை பகிரும் முன்மொழிவுகளும் 22வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கும், பொதுமக்களுக்கும் பொறுப்புக்கூறும் அமைச்சரவைக்கும், அரசியல் யாப்பு சபைக்கும் ஒருசில அதிகாரங்களை வழங்குவதும் பொருத்தமானதென 22வது திருத்தத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 22வது அரசியல் திருத்தத்திற்கு அமைச்சரவையில் கொள்கை ரீதியான அனுமதியை பெற்றுக்கொண்டார். 22வது திருத்தம் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.