இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஓரு நாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகும் போட்டி பகலிரவு ஆட்டமாக இடம்பெறும். தசுன் ஷானக்க தலைமையில் இலங்கை அணியும், எரோன் பின்ச் தலைமையில் அவுஸ்திரேலியா அணியும் களமிறங்கவுள்ளன. இரு அணிகளும் ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்று 2 : 1 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.