வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் ஆயுத குழுவுடன் தொடர்புடைய 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புளியங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவர்களை கைதுசெய்துள்ளனர். நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்த போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களின் தொலைபேசியிலிருந்து புகைப்படங்கள் பலவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. மோசடி குழுவின் பிரதான உறுப்பினர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தும் வகையிலான புகைப்படங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்படும் புகைப்படங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களில் 15 பேர் 30 வயதுக்கும் குறைந்தவர்களென தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.