தமிழ் சிங்கள புத்தாண்டை ஒட்டி சதோச ஊடாக நிவாரண பொதி ஒன்றை வழங்க வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
5 கிலோ நாடு ரக அரிசி, 5 கிலோ சம்பா ரக அரிசி, 400 கிராம் ஹைலெண்ட் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலைத் தூள் என்பன இந்நிவாரணப் பொதியில் அடங்குகின்றன.
இந்நிவாரணப் பொதியானது 1950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. நுகர்வோருக்கு குறைந்தபட்சம் இந்நிவாரண பொதியிலிருந்து சுமார் 700 ரூபா நிவாரணம் கிடைப்பதாக வர்த்தக அமைச்சு தெரிவிக்கிறது. நாளை முதல் இலங்கை சதோச விற்பனை கிளைகள் ஊடாக இந்நிவாரண பொதியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.