கடற்றொழில் துறையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய கடலில் விபத்துக்குள்ளாகும் படகுகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் அதற்கான ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. சகல மீன்பிடி துறைமுகங்களுக்கு அருகிலும் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை வெளிநாடுகளில் கைப்பற்றப்படும் உள்ளுர் கடற்றொழில் படகுகள் மற்றும் நாட்டின் கடல் எல்லையை மீறும் கடற்றொழில் படகுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் துறையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடைமுறை..
படிக்க 0 நிமிடங்கள்