fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி தர்மராஜா நித்தியாவிற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2022 18:40

கொடுரமாக கொலை செய்யப்பட்ட மாணவி தர்மராஜா நித்தியாவிற்கு நிலையான நீதி கேட்டு ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாலிஎல நகரில் இப்போராட்டம் இடம்பெற்றது.

உடுவரை பெருந்தோட்ட கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயதான தர்மராஜா நித்யா எனும் பாடசாலை மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார். பதுளை ஹாலிஎல தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 13 யில் கல்வி கற்கும் மாணவியான இவர் பாடசாலைக்கு சென்றுவரும் வழியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நிலையான நீதி கேட்டு பதுளை மாவட்ட ஆசிரியர் சேவையாளர் சங்கத்தினர் இன்று ஹாலியஎல நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2022 18:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க