இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசியை கலந்து சிவப்பு, பச்சை அரிசியாக சந்தைக்கு விநியோகிக்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இரத்தினபுரி நுகர்வோர் சேவை அதிகாரிகளினால் அதுதொடர்பான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. எம்பிலிப்பிட்டிய, துன்கம மற்றும் மொரக்கெட்டிய ஆகிய பிரதேசங்களில் குறித்த அரிசி ஆலைகள் நடத்திச்செல்லப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் அதன் உரிமையாளர்கள் இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்;ட வெள்ளை அரிசியுடன் உள்நாட்டு சிவப்பு அரிசியை கலந்து கூடுதல் விலைக்கு குறித்த அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் விற்பனை செய்து வந்துள்ளனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெளிநாட்டு வெள்ளை அரிசி பொதிகள் 200ம், சிவப்பு அரிசி பொதிகள் 400ம் அதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் அரிசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை பெறப்பட்டதன் பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.