பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இராணுவ வீரர்கள் 10 பேர் பலியாகியுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனிநாடு கோரி போராடும் பிரிவினைவாத குழுவினரே இராணுவத்தினரை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீதே பிரிவினைவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே இராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இராணுவ வீரர்கள் 10 பேர் பலி
படிக்க 0 நிமிடங்கள்