தோட்டப்பிரிவின் சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
“பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தோட்ட பிள்ளைகளுக்கு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. சுகயீனமடைந்தால் சிகிச்சை பெறுவதிலும் சிரமங்கள் உள்ளன. தோட்ட வைத்தியசாலைகளை அரசு சுவீகரித்து அபிவிருத்தி செய்யுமாறு தோட்டமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பாக கவனம் செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் தோட்ட வைத்தியசாலைகள் பலவற்றை அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டது. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தினால் தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் நடவடிக்கையை நிறுத்தியது. தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசாங்கத்தினால் சுவீகரிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. நிதியமைச்சர் கடந்த நாட்களில் தோட்ட தமிழ் மக்களுக்கென கோதுமை மாவுக்கான நிவாரணத்தை வழங்கினார். அதேபோன்று தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கத்தினால் பொறுப்பேற்று தோட்ட மக்களின் சுகாதார நலனுக்காக எடுக்கப்பட்ட இத்தீர்மானம் முக்கியமாகும். “