ஆயிரத்து 500 வகை பொருட்களை கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊடாக குறைந்த விலையில் வழங்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஹோம் சொப் திட்டத்திற்கென 15 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கூட்டுறவு தினத்திற்கு இணைவாக வட மத்திய மாகாண செயற்திறன் விருது வழங்கும் பிரதான நிகழ்வு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. செயற்திறன் மதிப்பீட்டு வெற்றியை ஈட்டிய பல்வேறு சேவை கூட்டுறவு சங்கங்களுக்கு இதன்போது விருது வழங்கப்பட்டது.