நீதிமன்ற அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் சிறைதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.