கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை வழமைக்கு கொண்டுவர மேலும் 2 வருடங்கள் செல்லலாம் என ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அத்துடன், 2020 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைத்த வருமானம் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 72 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
கடும் நெருக்கடிக்குட்பட்டுள்ள சுற்றுலாத்துறை 2024 ஆம் ஆண்டளவில் மீண்டும் வழமைக்கு திரும்பலாம் என உலக சுற்றுலா அமைப்பு தெரிவிக்கின்றது. ஓரளவுக்கு வழமைக்கு திரும்பியுள்ள சுற்றுலாத்துறை ஒமிக்ரோன் திரிபு பரவலுடன் மீண்டும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்துறை மந்தகதியில் சென்றுக்கொண்டிருந்தது.
2020 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளில் 19 சதவீத வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது. எவ்வாறாயினும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளில் 24 சதவீத வீழ்ச்சியும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 65 சதவீத வீழ்ச்சியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.